திங்கள், 15 அக்டோபர், 2012

கதை சொல்ல வந்த பெண் கதாசிரியரை மானபங்கம் செய்த ராணி முகர்ஜியின் சகோதரர் கைது. பாலிவுட்டில் பரபரப்பு.



Tuesday  16  October  2012  
Rani Mukerjee's Brother molestation case


பெண் கதையாசிரியர் ஒருவரை மானபங்கம் செய்ததாக நடிகை ராணி முகர்ஜியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ராணிமுகர்ஜியின் சகோதரர் ராஜா முகர்ஜியிடம் பெண் கதையாசிரியர் ஒருவர் கதை சொல்வதற்காக வந்தார். அவரை ராஜா தனது காரில் அழைத்து சென்றபோது காரில் வைத்தே அப்பெண்ணை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் அப்பெண் அந்தேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜாவை கைது செய்துள்ளனர். அதிகாலை கைது செய்யப்பட்ட ராஜா நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 10,000 ரூபாய் ஜாமீனில் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது. கதை சொல்ல வந்த பெண்ணை ராணி முகர்ஜியின் சகோதரர் மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மானபங்கம் செய்யப்பட்ட பெண் இயக்குனராகவேண்டும் என்ற நோக்கில் பாலிவுட்டில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மானபங்கத்திற்கு உட்படுத்தப்பட்ட அப்பெண் மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

as

thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக